ஆயுத பூஜை.. உயரும் காய்கறிகளின் விலை

57பார்த்தது
ஆயுத பூஜை.. உயரும் காய்கறிகளின் விலை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் ஏற்ற தாழ்வுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை கோயம்பேட்டில் நேற்றைய (அக்.10) விலைப்படி 1 கிலோ தக்காளி ரூ.90 , 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.70, அவரைக்காய் ரூ.80, பீன்ஸ் ரூ.60, பீட்ரூட் ரூ.40, கத்தரிக்காய் ரூ.30, கேரட் ரூ.45 ரூபாய்க்கு விற்பனையானது. இது மேலும், உயரலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி