சிவகாசி: பங்குனி மாத சனி பிரதோஷ விழாவில் குவிந்த பக்தர்கள்...

74பார்த்தது
சிவகாசியில் பங்குனி மாத சனி பிரதோஷ விழாவில் குவிந்த பக்தர்கள்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மற்றும் சுற்று பகுதியில் இருக்கும் சிவன் ஆலயங்களில் பங்குனி மாத சனி பிரதோஷ விழா அதிவிமர்ச்சியாக நடைப்பெற்றன. முன்னதாக நந்தி பகவானுக்கு பக்தர்கள் கொண்டு வந்த காணிக்கை பொருட்களான இளநீர், பன்னீர், பால், தயிர், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசன திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து, நந்தி பகவானுக்கு சந்தனகாப்பு வைத்து வெள்ளி காவசம் அணிந்து, வண்ண, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு நடைப்பெற்றன. சனி பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவகாசி மற்றும் சுற்று பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வணங்கி சென்றனர்.

தொடர்புடைய செய்தி