சிவகாசி: நாளை(19.9.2024) முதல் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

62பார்த்தது
விருதுநகர் மாவட்டம், மதுரை கோட்டத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக
நாளை (19.9.2024) முதல் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் கூடல்நகர்-சமயநல்லூர், மதுரை -கூடல்நகர், மதுரை-திண்டுக்கல் தடத்தில் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி இன்று(18ஆம் தேதி) முதல் அக் 8ஆம் தேதி வரை இத்தடத்திலான ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி
ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு-செங்கோட்டை ரயில் எண் 16845 செப்18ம் தேதி முதல் அக் 7ம் தேதி வரை திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை-ஈரோடு ரயில் எண் 16846 செப் 19 ம் தேதி முதல் அக் 8 ம் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து காலை 11. 15 மணிக்கு புறப்பட்டு, ஈரோடு செல்லும்.

மேலும் மாற்றுப் பாதை வழியாக செங்கோட்டையில் இருந்து காலை 7:05 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை-மயிலாடுதுறை பயணிகள் ரயில் செப் 19 முதல் அக் 7 வரை கள்ளிக்குடி, திருமங்கலம் திருப்பரங்குன்றம், மதுரை கொடைரோடு, திண்டுக்கல் வடமதுரை, மணப்பாறை வழியே செல்வதற்கு பதிலாக விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும். குருவாயூரிருந்து இரவு 11:15 மணிக்குப் புறப்படும் குருவாயூர்-சென்னை ரயில் எண் 16128 செப் 23, 25, 26, 27, ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி