ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் வாக்களித்தார்..

78பார்த்தது
ஹரியானாவில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (அக்., 05) நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர், ஜஜ்ஜாரில் உள்ள வாக்குச் சாவடியில் முதல் முறையாக வாக்களித்தார். அப்போது பேசிய அவர், 'இளைஞர்களாக, மிகவும் பொருத்தமான வேட்பாளருக்கு வாக்களிப்பது நமது பொறுப்பு. சரியான பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பது நம் கையில் உள்ளது. முதல் வாக்கை பதிவு செய்ததால் நான் உற்சாகமடைந்துள்ளேன்' என்றார்.

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி