மிளகாய் பொடி தூவி கொத்தனார் ஓட ஓட வெட்டிக் கொலை

61பார்த்தது
மதுரை சோழவந்தான் அருகே மேலக்காலை சேர்ந்தவர் சதீஷ் (32.) கட்டிட தொழிலாளியான இவர் (அக்., 3) செக்கானுாரணியிலிருந்து டூவீலரில் வீட்டுக்கு வந்த போது ஒரு கும்பல் வழிமறித்து மிளகாய் பொடி தூவி சதீஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த சதீஷ் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாக கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி