ராஜபாளையத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

80பார்த்தது
இராஜபாளையம் பகிர்வு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பகிர்வு அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்த, இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ந. மாரீஸ்வரன் ரூபாய் 25, 000, பாலிடெக்னிக் மாணவர்கள் ஆனந்தக் கண்ணன் ரூ. 20, 000, தங்கராஜ் ரூ. 12, 290, சிவ சண்முகம், ரூ. 12, 000, சிவரஞ்சனி ரூ. 11, 925, சுரேஷ் ரூ. 11, 840, சஞ்சீவிராஜ், ரூ. 11, 390, கல்லூரி மாணவி ஹேமா கிருத்திகா ரூ. 5, 349 என மாணவர்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்திருந்த எட்டு மாணவர்களும் இன்று வரவழைக்கப்பட்டு, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அலுவலகத்தில் வைத்து, பகிர்வு அறக்கட்டளை நிறுவனர் க. செல்வக்குமார் தலைமையில், நிர்வாகிகளான சரவணன், ஹரிஹரக்குமார் ஆகியோர் 1, 09, 794 ரூபாய்க்கான காசோலைகளை மாணவர்களுக்கு வழங்கினர். 2015-லிருந்து இதற்கு முன்பு வரை 200 மாணவர்களுக்கு மேல் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி