நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே கர்ப்பமான 17 வயது சிறுமி, கருவைக் கலைக்க சுயமாக மருந்து சாப்பிட்ட நிலையில், அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கர்ப்பம் ஏற்பட காரணமாக இருந்த, சிறுமியின் உறவினரான அரவிந்த் (23) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.