மிக கனமழை எச்சரிக்கை.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு

58பார்த்தது
மிக கனமழை எச்சரிக்கை.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு
மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும், இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி