பள்ளி மாணவர்கள் அரசு அலுவலகங்களை பார்வையிட்டனர்

76பார்த்தது
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அறிவோம் தெளிவோம்” என்ற களப்பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசு அலுவலகங்களை நேரடியாக பார்வையிட்டு, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொண்டு பயன்பெற்றனர்.

அதன்படி, விருதுநகர் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையம், வங்கி, வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையம், சார்பு நீதிமன்றம், தபால்நிலையம் உள்ளிட்ட அலுவலகங்களை பார்வையிட்டு, அந்தந்த அலுவலகங்களின் பணிகள், சேவைகள் குறித்து தெரிந்துகொண்டு, தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி