ராஜபாளையம் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

81பார்த்தது
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் துணை கர்ப்பகராஜ் முன்னிலை வகித்தார். உலக மக்கள் தொகை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு குடும்ப திட்டமிடலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாலின சமத்துவம், குடும்ப கட்டுப்பாடு, தாய் வழி சுகாதாரம், மனித உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் மாரிச்சாமி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பங்கஜம், வட்டார சுகாதார செவிலியர் சரஸ்வதி, வட்டார இயக்க மேலாண்மை அலுவலர் மஞ்சு ஆகியோர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பொதுமக்கள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி