இராஜபாளையம்: லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது...

66பார்த்தது
இராஜபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காய்கறி மார்க்கெட் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வில் மலையடிப்பட்டியை சேர்ந்த குபேந்திரன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி கீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி