இராஜபாளையம்: கஞ்சா விற்ற 3 இளைஞர்கள் கைது...

54பார்த்தது
இராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது. கஞ்சா மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியல் உள்ள
சுந்தரராஜபுரம் அரசு ஆதிதிராவிட நல பள்ளியின் விடுதி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சேத்துார் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் முருகராஜ் தலைமையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது சோதனையில் இராஜபாளையம் பகுதியை சேர்ந்த இராம்ராஜ் கனி (34), சங்கிலி கணேஷ், (24) சூர்யாபகத் (22) ஆகிய மூன்று பேரும் இரண்டு இருசக்கர வாகனத்தில் வைத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவர்களிடமிருந்து 450 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த சேத்துார் காவல் நிலைய போலீஸார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி