கழிவு நீர் வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பைகள்

83பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெம்பக்கோட்டை சாலையில் பழை கழிவு நீர் வாய்க்கால் சேதமடைந்து இருந்ததால் அவற்றை புதுபிக்க புதிதாக வாய்க்கால் கட்டும் பணியினை நெடுஞ்சாலை துறையின் சார்பில் கடந்த நான்கு மாதமாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. பணிகள் விரைந்து நடைபெறாமல் மெதுவாக நடந்து வருவதால் பல இடங்களில் கழிவு நீர் செல்ல முடியாமல் அங்காங்கே கழிவு நீர் தேங்கியுள்ளது.
அதில் குப்பைகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவி வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி