விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி

76பார்த்தது
மதுரை மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாட்ஷா(27). இவர் மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(39) என்பவர் உடன் பைக்கில் அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். பைக்கை பாட்ஷா ஒட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அருப்புக்கோட்டை அருகே மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கோவிலாங்குளம் விலக்கு பகுதியில் திடீரென பன்றி குறுக்கே வந்ததால் பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. ‌ இதில் பாட்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். செந்தில்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‌ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா போலீசார் பாட்ஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து செந்தில்குமார் தந்தை சோமநாதன்(60) அளித்த புகார் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி