தூய்மையாக இருங்கள் நோயின்றி இருங்கள் திட்ட‌ விழிப்புணர்வு

79பார்த்தது
தூய்மையாக இருங்கள் நோயின்றி இருங்கள் திட்ட‌ விழிப்புணர்வு
அருப்புக்கோட்டை நகராட்சி 8 வது வார்டுக்குட்பட்ட பாரதிநகரில் இன்று நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் நகராட்சி ஆணையாளர் உத்தரவுபடி "தூய்மையாக இருங்கள் நோயின்றி இருங்கள்" திட்டத்தின் கீழ் அங்குள்ள சமுதாய கழிப்பறை முழுவதும் தூய்மை பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கழிப்பறையை சுத்தமாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ‌

தொடர்புடைய செய்தி