இருசக்கர வாகன மோதிய விபத்தில் முதியவர் படுகாயம்

56பார்த்தது
இருசக்கர வாகன மோதிய விபத்தில் முதியவர் படுகாயம்
அருப்புக்கோட்டை கிருஷ்ணாபுரம் கண்மாய் அருகே முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து; தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

அருப்புக்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி(80). இந்நிலையில் கடந்த மார்ச் 9ஆம் தேதி ராமசாமி தனது சொந்த வேலையாக ஜோகில்பட்டி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாலை 6. 30 மணி அளவில் கிருஷ்ணாபுரம் கண்மாய் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதி இராமசாமி படுகாயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து ராமசாமி மகன் நாகேந்திரன் அளித்த புகார் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய போலீசார் நேற்று மார்ச் 10ஆம் தேதி விபத்து ஏற்படுத்தியதாக இருசக்கர வாகனத்தின் ஓட்டுனர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சோலை என்பவர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி