சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டுத் தருவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, சொந்த வங்கியின் விவரங்களை மறைத்து உச்ச நீதிமன்றத்தில் தலைகுனிந்துள்ளது. நரேந்திர மோடியின் உண்மையான முகம் தேர்தல் பத்திரங்கள் மூலம் வெளிப்படப் போகிறது எனவும் இந்திய வரலாற்றின் மிகப்பெரிய ஊழலாக தேர்தல் பத்திரங்கள் விவகாரம் நிரூபணம் ஆகப்போகிறது எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது X தளத்தில் பதிவு செய்துள்ளார்.