புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்

82பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 9. 50 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ‌ இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயசீலன் தலைமையில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். ‌ முன்னதாக செம்பட்டியில் உள்ள முத்தரையர் சிலைக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள், கூட்டுறவு துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர். ‌

தொடர்புடைய செய்தி