சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை

64பார்த்தது
சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தொட்டியங்குளம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. பயணிகள் நிழற்குடையில் மேற்பகுதி முழுவதும் உடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவு காணப்படுகிறது. மேலும் பயணிகள் நிழற்குடையும் ஆங்காங்கே விரிசல் விட்டு உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் பயணிகள் நிழற்குடை முழுவதும் தனியார் நிறுவனங்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த பயணிகள் நிழற் குடையை அப்பகுதி பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் முதியவர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இது போன்று ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை அப்புறப்படுத்தி அங்கு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி