விழுப்புரத்தில் கார் திருட்டு போலீசார் விசாரணை

67பார்த்தது
புதுச்சேரி மாநிலம் தொண்டமா நத்தம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 50). இவர், தனது காரை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த காரை, டிரைவர் முருகையன் ஓட்டி வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் அந்த காரை, டிங்கரிங் வேலை செய்வதற்கு எடுத்துவந்து, விழுப்புரம் - எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலை அருகே நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்த போது அந்த காரை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 8 லட்சமாகும். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி