பிரம்மதேசம் அருகே பானை சின்னம் கருப்பு மையால் அழிப்பு

548பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் வடநெற்குணம் சாலையில் உள்ள பரசுராமன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவற்றில் திமுக கூட்டணி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கு ஆதரவாக பானை சின்னம் வரையப்பட்டிருந்தது இந்த பானை சின்னத்தில் மர்ம நபர்கள் யாரோ கருப்பு மையால் அழித்தனர் இதனை அடுத்து அங்கு இரு தரப்பினருக்கிடையே பிரச்சனை ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் உடனடியாக சுவற்றில் வெள்ளை சுண்ணாம்பாடித்து மறைத்து பானை சின்னத்தில் மேல் கருப்பு மையால் அழித்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி