குடிப்பழக்கத்தை கண்டித்ததால் தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு

84பார்த்தது
குடிப்பழக்கத்தை கண்டித்ததால் தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா நாதன்காடுவெட்டி கிராமம், முருகன் கோவில் தெருவை தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (வயது 23). இவருக்கும் ரேவதி என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ராஜேஷ் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரேவதி, கணவரிடம் கோபித்துக்கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்புதனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இருப்பினும் ராஜேஷ் அடிக்கடி மது குடித்து விட்டுபோதை யில் இருந்து வந்துள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோர் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு ராஜேசை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த மண்எண் ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவம் னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேஷ் உயிரிழந்தார். இது குறித்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி