பாவேந்தர் பாரதிதாசனின் 134ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் அவரது புகழைப் போற்றும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அந்த வகையில், தமிழ்க் கவிஞர் நாளாக இன்று காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உணர்வே என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடக்கும். இதில், தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், அரசுப்பணியாளர்கள், கல்லூரி மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர்.