கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூர் பகுதியில் அமைந்துள்ள விரட்டேஸ்வரர் ஆலயத்தில் நேற்று சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரர் பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மல்லூர்பேட்டை அரகண்டநல்லூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.