அரசு பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம்

67பார்த்தது
அரசு பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம்
திருக்கோவிலுார் அடுத்த ஆலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மலர் முன்னிலை வைத்தார். திருக்கோவிலுார் வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணன் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
ஊராட்சி செயலாளர் ஏழுமலை, வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் புதிதாக பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


ஆசிரியர்கள் ஆனந்தி, ராபர்ட் சகாயராஜ், சோபா, சங்கர் கணேஷ், கோவிந்தராஜ், நித்தியா, அஞ்சலை ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் சசிகுமார் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி