விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் ரயில் நிலையம் முன்பு, தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக திமுக அரசை கண்டித்து, அதிமுக ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, தனபால்ராஜ், இளங்கோவன் உள்ளிட்டோர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இன்று (12.03.2024) மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.