சாலை தடுப்பு கட்டையில் மோதிய லாரி கவிழ்ந்தது

85பார்த்தது
திண்டிவனம் அருகே இரும்பு ஷீட் ஏற்றி வந்த லாரி தேசிய நெடுஞ்சாலையில் எல்லைக்கோடு வரையப்படாததால் சாலையோர தடுப்பு கட்டை மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னை அடுத்த பூந்தமல்லியில் இருந்து இரும்பு ஷீட்டுகளை ஏற்றிக் கொண்டு மதுரைக்கு லாரி ஒன்று புறப்பட்டு சென்றது. லாரியை திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த அணைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். லாரி திண்டிவனம் அடுத்த சின்ன நெற்குனம் லே-பை அருகே வந்து கொண்டிருந்த பொழுது சர்வீஸ் சாலை தொடங்கும் முன் அமைக்கப்பட்டிருந்த சாலையோர தடுப்புக்கட்டையில் மோதி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் கஜேந்திரன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தொடர்புடைய செய்தி