திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம்

58பார்த்தது
திண்டிவனம் அடுத்த திருவக்கரை வக்கரகாளி அம்மன் கோவிலில் பௌர்ணமி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினங்களில் நள்ளிரவு 12 மணிக்கும் ஜோதி ஏற்றப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கோவில் மேலே அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட தீக்குண்டத்தில் ஜோதி ஏற்றப்பட்டது. இதை திரளான பக்தர்கள் தரிசித்து சென்றனர். முன்னதாக சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்ட மூலவருக்கு சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் தீபம் காண்பிக்கப்பட்டது. அந்த ஜோதியானது கொண்டு வரப்பட்டு கோவில் மேலே அமைக்கப்பட்ட பிரம்மாண்ட தீக்குண்டத்தில் வைக்கப்பட்டிருந்த கற்பூரங்களை ஏற்றி வைத்தனர். இந்த ஜோதியை புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் சென்னை பட்டிமன்றி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வந்திருந்து தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி