அரசு சொகுசு விரைவு பேருந்து பேரி கார்டில் மோதி விபத்து

2947பார்த்தது
திண்டிவனத்தில் தவறான பாதையில் வந்த அரசு சொகுசு விரைவு பேருந்து பேரி கார்டில் மோதி விபத்து 50 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.

சென்னையில் இருந்து அரசு சொகுசு பேருந்தானது திருவண்ணாமலைக்கு 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது அரசு ஏசி சொகுசு பேருந்தை திருச்சி தொழுதூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது திண்டிவனம் மேம்பாலம் மேல் பகுதியில் வரும் போது டிரைவர் வழி தெரியாமல் சிறிய பாதையில் பேரிகார்ட் இருந்த பகுதியில் வந்தபோது பேரி கார்டில் மோதி பேருந்தில் பக்கவாட்டில் இருந்த கண்ணாடிகள் அனைத்தும் சுக்கு நூறாக உடைந்தன.

இதில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இந்த விபத்தால் திண்டிவனம் மேம்பாலம் மேல் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி