டாஸ்மாக் முறைகேடு மற்றும் மோசடிகள் குறித்து நியாயமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். "அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்து பயன்படுத்திய வார்த்தைகளை பார்த்தால் வெற்று விளம்பர மாடல் திமுக அரசு பற்றி ஒரு ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது. முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணம் தான் 200 தொகுதிகளை வெல்வோம் என்ற சூளுரையின் பின்னணி” என்றார்.