மாற்றுத்திறனாளிகளுக்கு 2 ல மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

83பார்த்தது
வாணியம்பாடியில் 27 ஆம் ஆண்டு அரச மர விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ரூ. 2 லட்சம் மதிப்பில் மாற்று திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம், 5 ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியில் உள்ள அரசமர விநாயகர் சதுர்த்தி 27 ஆம் ஆண்டு
விழாவினை முன்னிட்டு அரசமரதிற்கு கீழ் சுமார் 10 அடியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

இரண்டாவது நாளான இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுமார் ரூபாய் 2லட்சம் மதிப்பீட்டில் மாற்று திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம், ஏழை எளிய 5 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினர். மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி