உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

64பார்த்தது
உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் உலக பூமி தினத்தை மரக்கன்றுகள் வைத்து கொண்டாடப்பட்டது.

ஏப்ரல். 22 உலகம் முழுவதும் இன்று உலக பூமி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த லாலா ஏரி பகுதியில் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி நண்பர்களுடன் இன்று உலக பூமி தினம் மரக்கன்றுகள் நடவு செய்தும் நடவு செய்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றியும் கொண்டாடினர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பத்தை தணிக்க மரக்கன்றுகள் நடவு செய்யுங்கள்.

நமது வருங்கால சந்ததிகளை காக்க மரக்கன்றுகள் நடவு செய்யுங்கள்.

மழை பெற மரக்கன்றுகள் நடவு செய்யுங்கள் என அறக்கட்டளை தலைவர் சேதுராமன் கூறினார்.

தொடர்புடைய செய்தி