ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வணக்கம்பாடி ஊராட்சியில் ஏழு கால்நடை மருந்தகங்களுக்கு ரூ.10.70 லட்சம் மதிப்பீட்டில் பரிசோதனை உபகரணங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மருத்துவர்களிடம் இன்று வழங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, ஊராட்சி குழு செயலாளர் பாபு, ஊராட்சி மன்றத் தலைவர் ராஜி உடன் இருந்தனர்.