திருப்பத்தூர்: ரயிலில் பயணம் செய்த மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு

57பார்த்தது
கோவை மாவட்டம் ஆணைமலை பகுதியைச் சேர்ந்த மயில்சாமி மனைவி வசந்தி (60) இவர் தனது பேரனுடன் 13ஆம் தேதி சென்னைக்குச் சென்று மீண்டும் 15ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவைக்குச் செல்ல பயணம் செய்தார். 

அப்போது குடியாத்தம் ரயில் நிலையம் அருகே வந்தபோது பொது நள்ளிரவு 12 மணியளவில் தனது பேரன் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறியதால் கழிவறைக்குள்ளே அனுப்பிவிட்டு வெளியே நின்றிருந்த வசந்தியிடம் அடையாளம் தெரியாத மர்ம நபர் கழுத்தில் இருந்த ஆறு சவரன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். 

இதன் காரணமாக வசந்தி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை இருப்புப் பாதை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் மூன்று தனிப் படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடி வந்த நிலையில் குடியாத்தம் பேருந்து நிலையத்தில் சந்தேகிக்கும்படியாக நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது 
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பவரே வசந்தியின் 6 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து கார்த்திக்கை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி