*குருசிலாப்பட்டு கையுறையில்லாமல் கால்வையை சுத்தம் படுத்தும் தூய்மை பணியாளர்கள்! ஊராட்சி மன்ற தலைவர் கையுறை தரவில்லை வீடியோ எடுத்து அனுப்புங்க சாமி உங்களுக்கு புண்ணியமா போகட்டும் துப்புரவு பணியாளர்கள் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த
குருசிலாப்பட்டு பகுதியில் உள்ள கால்வாயை தூய்மை பணியாளர்கள் நிர்மலா மற்றும் சிவகாமி இருவர் கையுறை இல்லாமல் சுத்தம் படுத்தி வந்துள்ளனர்.
அப்போது அதே பகுதியை சார்ந்த நபர் ஒருவர் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்
அப்போது அந்தத் தூய்மை பணியாளர் இந்த வீடியோவை எடுத்து அனுப்புங்க சாமி உங்களுக்கு புண்ணியமா போகட்டும் என கூறியுள்ளார்
மேலும் வீடியோ எடுத்த நபர் கையுறை ஏதும் கொடுக்கவில்லையா என கேட்கும் பொழுது ஊராட்சி மன்ற தலைவர் கையுறை எங்களுக்கு கொடுக்கவில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்தார்
மேலும் மற்றொருவர் கலெக்டர் அலுவலகம் வந்து கூட நாங்க சொல்றோம் என கூறியுள்ளார்
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.