பெண் கழுத்தில் இருந்து ஐந்து சவரன் நகை கொள்ளை

75பார்த்தது
*திருப்பத்தூர் அருகே அரசு மருத்துவமனை செவிலியரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மருமகளுமான பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க நகையை தலைக்கவசத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு. வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை. *

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூரிக மானிமிட்டா ஊராட்சி பகுதியில் வசிப்பவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன்.

இவரது மகன் மனோகரனும் அவரது மனைவியும் அரசு மருத்துவமனை செவிலியருமான செந்தாமரை என்பவரும் திருப்பத்தூர் நகரப் பகுதியில் உறவினர் ஒருவரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும் பொழுது பூரிக மானிமிட்டா ஏரிக்கரை வளைவில் வந்து கொண்டிருந்தபோது இரவு சுமார் ஒன்பது மணி அளவில் இருண்ட பகுதி என்பதால் தலை கவசத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் செந்தாமரையின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பி ஓடி உள்ளனர்.

இதனால் நிலைகுலைந்து இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த மனோகரன் மற்றும் அவரது மனைவி செந்தாமரை செய்வதறியாது திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி