குழந்தையை வைத்து அரசியல் செய்கிறீர்களா ஆட்சியர் கேள்வி.

57பார்த்தது
குழந்தையை வைத்து அரசியல் செய்கிறீர்களா ஆட்சியர் குழந்தையுடன் மனு அளிக்க வந்த நபரை கேள்வி எழுப்பியதால் பரப்பரப்பு

திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் 4 வயது எல்கேஜி மாணவன் தந்தையுடன் வந்து பள்ளிக்கு எதிரில் விற்கப்படும் புகையிலை மற்றும் போதை வஸ்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளித்ததால் பரபரப்பு. தந்தையை கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர். *

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு சிவராஜ் பேட்டையில் வசிப்பவர் மணிகண்டன். இவரது நான்கு வயதுள்ள மகன் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய பிள்ளை படிக்கும் பள்ளிக்கு எதிரிலேயே புகையிலை ஹேண்ட்ஸ் குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளை தொடர்ந்து கடையில் விற்று வருகிறார்கள் என்றும் இதனால் பள்ளி மாணவர்கள் சீருடையிலேயே வந்து கடைக்குள் மறைந்து புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி சீரழிகிறார்கள் என்றும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி