36 மணி நேரத்தில் பத்தாயிரம் வரிகள் அடங்கிய முழு கவிதை

541பார்த்தது
*திருப்பத்தூரில் நடிகர் விஜய் பற்றி 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள் அடங்கிய முழு கவிதையை எழுதி உலக சாதனை படைத்த சின்னத்திரை உதவி இயக்குனருக்கு கில்லி திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்ட நாளில் இரண்டு உலக சாதனை விருதுகள் வழங்கப்பட்டது. *


கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் நடித்து தரணி இயக்கத்தில் வெளியான கில்லி திரைப்படம் இன்று மீண்டும் தமிழகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்டு திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படும் நிலையில்.

திருப்பத்தூர் அடுத்த ஜடையனூர் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளரும் நடிகரும் சின்னத்திரை உதவி இயக்குனரும் நடிகர் விஜயின் தீவிர ரசிகருமான கதிர்வேல் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இயங்கி வரும் யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனை நிறுவனம் மற்றும் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனை நிறுவனத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலையில் கடந்த 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கி மறுநாள் 17ஆம் தேதி இரவு 11 மணி வரை மொத்தம் 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளை உள்ளடக்கி ஒரு முழு கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி