நெமிலி அடுத்த ரெட்டிவலம், நெடும்புலி, உளியநல்லூர், கர்ணாவூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயத்துக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் அறிவிக்கப்படாமல் மின்தடை செய்யப்படுகிறது.
இதைக்கண்டித்து, விவசாயிகள் சங்க மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் மற்றும் விவசாயிகள் இன்று பனப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விரைவில் தீர்வு காணப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர்.