அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - பெண் உயிரிழப்பு

73பார்த்தது
அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - பெண் உயிரிழப்பு
அரசுப் பேருந்து ஒன்று இன்று காலை சுமார் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலை ஒரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே பயணிகளை மீட்ட அப்பகுதி மக்கள், அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி லட்சுமி (50) என்பவர் உயிரிழந்தார். மேலும், 25க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி