வாக்கு என்னும் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு!

71பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு என்னும் பணிகளை மேற்கொள்ள உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

அதனை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஐஏஎஸ் தொடங்கி வைத்தார். பின்னர் வாக்கு எண்ணிக்கையின் போது என்னென்ன பணிகளை செய்ய வேண்டும். என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பது குறித்து ஆட்சியர் பேசினார். இந்த நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) ராஜேந்திரன் மற்றும் தேர்தல் வட்டாட்சியர் கணேசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி