ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் ஆட்சியர் நேர்முக உதவியாளர் விஜயராகவன், உதவி ஆணையர் கலால் வரதராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் உடன் இருந்தனர்.