ராணிப்பேட்டையில் மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டம்!

60பார்த்தது
ராணிப்பேட்டையில் மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக்குழு சாதாரண கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் நாகராஜ், மாவட்ட ஊராட்சி செயலர் (பொறுப்பு) பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு மதிப்பூதிய அடிப்படையில் தற்காலிக உதவியாளரை பணி நியமனம் செய்வது என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊராட்சி உதவியாளர் உமாபதி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி