பேரணாம்பட்டு: ஆட்டோ டிரைவர் கடத்தல்? - போலீஸ் விசாரணை!

52பார்த்தது
பேரணாம்பட்டு திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சித்ரா. இவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "எனது கணவர் பெயர் பழனி. எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தனியார் நிதி நிறுவனத்தில் கணவர் கடன் வாங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆட்டோவில் உறவினர் வீட்டுக்கு நிகழ்ச்சிக்கு சென்ற போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் கணவரை அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரின் செல்போன் எண்ணும் தற்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே கணவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்புடைய செய்தி