மாற்றுத்திறனாளிகள் நலசங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

76பார்த்தது
வேலூர் மாவட்டம்,
ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலசங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்

குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 30000 மாற்றுத்திறனாளி போலி அடையாள அட்டைகள் இருப்பதாக அரசு கவனத்திற்கு கொண்டு சென்றோம் அதன் விளைவாக 2022 ஆம் ஆண்டு போலி அடையாள அட்டை விவகாரத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர் அந்த நடவடிக்கையோடு இந்த விவகாரத்தை மறைத்து விட்டனர் போலி அடையாள அட்டையை தயாரித்தது யார் மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இதற்கு துணைப் போய் உள்ளனர் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி