பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல்; 11 பேர் பலி

85பார்த்தது
பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல்; 11 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் அப்பர் குர்ரம் மாவட்டத்தில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர, 6 பேர் காயமடைந்தனர். இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், குர்ரம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 5 பயங்கரவாதிகள் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி