மதுபோதையில் மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்

1539பார்த்தது
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பகுதியை சேர்ந்தவர்கள் ராதா (38), ராமு (43) தம்பதியினர். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரின் விவசாய நிலத்தில் வேலை செய்வதற்க்காக வந்து சேட்டு புதிதாக காட்டியுள்ள வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு (08. 06. 2024) கணவன் ராமு மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கணவன் ராமு கட்டையால் தனது மனைவி ராதாவை தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ராதாவின் அலறல் சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் வந்து பார்க்கும் போது ராதா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இவர்களை கண்டதும் ராமு அங்கிருந்து தப்பியோடி உள்ளார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காட்பாடி காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மனைவியை கொன்ற ராமு அரசு பேருந்தில் லத்தேரி வழியே தப்பி செல்வது தெரியவந்து அவரை L. G. புதூரில் மடக்கி பிடித்து கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி