கஞ்சா பறிமுதல் வட மாநில வாலிபர்கள் 3 பேர் கைது

72பார்த்தது
வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் காவல் ஆய்வாளர் நிர்மலா மற்றும் உதவி ஆய்வாளர் கார்திக் தலைமையிலான போலீசார் பசுமாத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது இரயில்வே மேம்பாலம் அருகே சந்தேகப்படும்படியாக வந்த வாலிபரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார் உடனே போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை மேற்கொண்ட போது அதில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 18 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் அந்த நபர் ஒடிசா மாநிலம் பரக்கானாவை சேர்ந்த சுகந்த் குமார் மாலிக் (25) என்பதும் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி விற்பனைக்கு எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதே போல் கே. வி. குப்பம்
வடுகன்தாங்கல் இரயில்வே மேம்பாலம் அருகே சோதனை மேற்கொண்ட போது அப்பகுதியில் சந்தேகம் அளிக்கும்படி இருந்த இரண்டு வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் அந்த இரண்டு வாலிபர்களும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர் மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது அதனையும் போலீசார் பறிமுதல் செய்து ஒடிசா கன்டமலா மாவட்டத்தை சேர்ந்த சித்தாந்தா பகர்த்தி (19) சந்திர நக்கன்ஹர் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி