காட்பாடி அருகே 17 வயது சிறுமி கர்ப்பம்

3650பார்த்தது
காட்பாடி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த பொழுது அங்கு வந்த அவரது உறவினர் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமி சில நாட்களாக வயிறு வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரது பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சிறுமியிடம் கேட்ட பொழுது அவர் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து சிறுமையின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுமையை கர்ப்பம் ஆக்கி அவருடைய உறவினரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி