நிலத்தகராறில் உறவினரை தாக்கிய வாலிபர் கைது

1894பார்த்தது
திருவலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கண்டிப்பேடு மாரியம்மன் கோவில் தெரு, மேட்டு காலனியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான அன்பு என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக அவ்வுபொழுது தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்படி நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோகன் அன்பு கறிவெட்டும் கத்தியை காட்டி மிரட்டி கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மோகன் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவலம் சப் இன்ஸ்பெக்டர் பிரகாசம் வழக்கு பதிவு செய்து அன்புவை கைது செய்தார்.

தொடர்புடைய செய்தி